Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

தி.மலை அடுத்த கீழ்பென்னாத்தூரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்வரவேற்ற திமுகவினருக்கு நன்றி தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரக் கூட்டத்தை தொடங் குவதற்காக நேற்றிரவு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தி. மலை மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது. ஆரணி மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

அப்போது அவர், திருவண் ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆரணி, போளூர், செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறவுள் ளார். இதற்காக, திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பும் மற் றும் ஆரணி அடுத்த சேவூர் கிராமத் திலும் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்றிரவு வந்தார்.முன்னதாக, அவருக்கு கீழ் பென்னாத்தூரில், திருவண்ணா மலை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகிகள் மற்றும்தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, திருவண்ணா மலையை மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x