Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலிக்கு, கடந்த 2-ம் தேதிலேசான நெஞ்சு வலி ஏற்பட்டதைஅடுத்து, கொல்கத்தாவில் உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருந்தது தெரிய வந்தது.
அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு சரி செய்யப்பட்டது. கொல்கத்தா மருத்துவமனையில் 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு, கங்குலி 7-ம் தேதி வீடு திரும்பினாா்.
இந்நிலையில், கங்குலிக்கு நேற்று மீண்டும் நெஞ்சு வலிஏற்பட்டதன் காரணமாக கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவமனையில் கங்குலிக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது. இதில் சற்று சீரற்ற நிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கங்குலி மீண்டும் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டார். அடுத்த 48 மணி நேரத்தில் அவருக்கு மற்றொரு ஸ்டென்ட் பொருத்தப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT