Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் கடும் சரிவு காணப்பட்டது. ரிலையன்ஸ் குழுமம், பியூச்சர் குழும சங்கிலி நிறுவனங்களை வாங்குவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன. அத்துடன் மத்திய பட்ஜெட் எவ்விதம் இருக்கும் என்பது தொடர்பான யூகங்களும் சரிவுக்குக் காரணமாக அமைந்தன.
மும்பை பங்குச் சந்தை 938 புள்ளிகள் வரை சரிந்து குறியீட்டெண் 47,409 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 271 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 13,967 புள்ளிகளானது. மும்பை பங்குச் சந்தையில் மதிய நேரத்தில் 1,117 புள்ளிகள் வரை சரிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.6 சதவீதம் சரிந்து ரூ.1,891.15 என்ற விலையில் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் இந்நிறுவனப் பங்கு சந்தித்த மிகப் பெரும் சரிவு இதுவாகும். இதன் காரணமாகவே தேசிய பங்குச் சந்தையில் புள்ளிகள் கடுமையாக சரிந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT