Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM
மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வாங்க கடந்த 3 ஆண்டுகளில் ரூ.8.45 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித் துள்ளார்.
மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண் இயந்திரக் கண்காட்சியை ஆட்சியர் த.அன்பழகன் தொடங்கி வைத்து பேசியதாவது:
20 சிறு, குறு விவசாயிகள் இணைந்து கூட்டுப் பண்ணைத் திட்டம் மேற்கொள்ளலாம். 100 விவசாயிகள் இணைந்து உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை அமைக்கலாம். மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16,900 விவசாயிகள் ஒன்றிணைந்து 169 குழுக்களை அமைத்துள்ளனர். இக்குழுவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.8.45 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியில் வாங்கப்பட்ட இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் ரூ.1.17 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதை சுழல் நிதியாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். குழுவின் 6 மாத செயல்பாடுகளை பொறுத்து வேளாண் இயந்திரங்கள் வாங்க தொகுப்பு நிதி வழங்கப்படும் என்றார்.
வேளாண் கல்லூரி முதல்வர் பால்பாண்டி, வேளாண் இணை இயக்குநர் த.விவேகானந்தன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT