Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM

எஸ்.கே.வி பன்னாட்டு பள்ளியில் குடியரசு தின விழா

திருவண்ணாமலை: எஸ்.கே.வி பன்னாட்டு பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை கீரனூரில் உள்ள எஸ்.கே.வி பன்னாட்டு பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் திருநாவுக்கரசு, நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பள்ளி முதல்வர் வண்டமர் பூங்குழலி, பொருளாளர் தரன் மற்றும் இயக்குநர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பள்ளியின் செயலாளர் பழனி பங்கேற்று சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில், ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x