Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க முடிவு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை

சுற்றுச் சூழலை பாதிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கலாம் என மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி தனியார் வாகனங்கள் 15 ஆண்டுகளைக் கடந்திருந்தால் அவற்றுக்கு அதிக சாலை வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதேபோல 8 ஆண்டுக்கு மேலானபொது போக்குவரத்து வாகனங்களுக்கும் இவ்விதம் கூடுதல் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பெருநகரங்களில் காற்று மாசுபடுவதைக் குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

பசுமை வரி என அழைக்கப்படும் இத்தகைய வரி விதிப்பானது அந்த வாகனம் பயன்படுத்தும் எரிபொருளின் தன்மைக்கேற்ப விதிக்கப்படும். அதேசமயம் எத்தனால் மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு இத்தகைய வரி விதிக்கப்படாது என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த பசுமை வரி விதிப்பு, காற்று மாசடைவதைக் குறைக்க உதவுவதோடு மாசுபடுத்துபவர் கூடுதலாக செலவிட வழிவகுக்கும். 15 ஆண்டுகளுக்கு மேலானதனியார் வாகனங்கள் மற்றும் 8ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்கப்படும்போது இந்தவரி விதிக்கப்படும் என அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிகேரளா – ஜாம்ஷெட்பூர்

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x