Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

2 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

அடுத்த 2 நாட்களுக்கு (ஜன.27, 28) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜன.29, 30 தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழைப்பொழிவு இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x