Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

திருவள்ளூரில் ஆவின் பாலகம் நடத்தமாற்றுத் திறனாளிகளுக்கு மானியம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் நடத்த ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின் முகவராக செயல்படலாம். ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

ஆகவே, ஆவின் பாலகம் நடத்துவதற்கு சொந்தமான கடை அல்லது வாடகைக் கடை வைத்துள்ளவர்கள் இடத்துக்கான அத்தாட்சி நகலுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படத்துடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x