Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
ராமேசுவரம் கடலில் மூழ்கி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே பெருமாள்புரத் தைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் நடந்த உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு நேற்று ராமேசுவரம் வந்தார். அக்னி தீர்த்தக் கடலில் குடும்பத்தினர் நீராடியபோது, லிங்கத்தின் 16 வயது மகன்ஜெயரஞ்சித்தை மட்டும் காணவில்லை. சிறிது நேரத்தில் இவரது உடல் அக்னி தீர்த்தக் கடலில் மிதந்தது. மெரைன் போலீஸார் ஜெயரஞ்சித்தின் உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயரஞ்சித் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT