Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன்

கொச்சி: கேரள தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் சுங்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுங்கத் துறை தொடர்ந்த வழக்கில், கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் (பொருளாதார குற்றங்கள்) நீதிமன்றம் சிவசங்கருக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் சுங்கத் துறை இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், சிவசங்கர் சிறையிலிருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x