Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களின் கீழ் திருப்பதி நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பதி - ரேணிகுண்டா விமான நிலைய சாலை, அலிபிரி-திருச்சானூர், பஸ் நிலையம் - ரேணிகுண்டா ஆகிய தடங்களில் பக்தர்களின் வசதிக்காக மேம்பாலம் அமைக்கும் பணி இரவும்பகலுமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்திற்காக ரூ.684கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதன் பணிகள் விரைந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று மதியம் திடீரென நிவாசம் பக்தர்கள் தங்கும்விடுதிக்கு அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை..
காண்டிராக்டர்களின் அலட்சிய போக்கால்தான் மேம்பாலம் இடிந்து விழுந்தது என காங்கிரஸ்,பாஜக, தெலுக்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT