Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
நாடு முழுவதும் நேற்று 13,203 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 1,06,67,736 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 1,03,30,084 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,84,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 131 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,53,470 ஆக அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகாவுக்கு அடுத்து கேரளா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசிய அளவில் கேரளாவில் 39.7% கரோனா நோயாளிகளும் மகாராஷ்டிராவில் 25% நோயாளிகளும் உள்ளனர். இரு மாநிலங்களில் மட்டும் 64.7% நோயாளிகள் உள்ளனர். இதற்கு அடுத்து கர்நாடகாவில் 4.1%, உத்தர பிரதேசத்தில் 3.9 % நோயாளிகள் உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT