Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

புதிதாக 540 பேருக்கு கரோனா முதியவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 540 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 299, பெண்கள் 241 என மொத்தம் 540 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 157 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 35,280 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 24,626 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 18,147 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 209 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 627 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,320 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,086 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 30,346,கோவையில் 54,077, செங்கல்பட்டில் 51,295, திருவள்ளூரில் 43,426 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 253 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 96,304 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று 55,919 பரிசோதனைகள் நடந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x