Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

டிராக்டர் பேரணிக்கு ஆதரவு கேட்டு கடலூரில் துண்டறிக்கை

கடலூரில் விவசாயிகள் போராட்டஒருங்கிணைப்புக் குழுவினர் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கினர்.

மத்திய வேளாண்திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்தில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி இன்று (ஜன.26) நடைபெறுகிறது.

இதனை விளக்கி பொதுமக் களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கடலூர் லாரன்ஸ் சாலையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மாதவன், விடுதலைச் சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூ. மாநில குழு உறுப்பினர் குளோப்,மார்க்சிஸ்ட் கம்யூ. நகர செயலாளர் அமர்நாத், மக்கள் அதிகாரம் மண்டல பொறுப்பாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x