Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM
தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனவரி 24-ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஆண் - பெண் பாலின சமத்துவத்துக்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இந்தியாவின் மகள்களுக்கு சல்யூட். பெண்களுக்கு வாய்ப்புகளையும் அவர்கள் கவுரவமாக வாழ்வதையும் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கல்வி, உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதேபோல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஊரடங்கின் போது ரோம் நகரில் சிக்கியிருந்த 263 பேரை மீட்டு வந்த ஏர் இந்தியா பெண் விமானி ஸ்வாதி ராவல் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT