Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

வீர தீர செயலுக்காக ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு நாளை ‘அண்ணா’ விருது

சென்னை

சாதுர்யமாக செயல்பட்டு விபத்தைதவிர்த்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு நாளை குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ‘அண்ணா’ விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அண்ணா விருது பெற பலரும் விண்ணப்பித்தனர். இதில், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த விரைவு ரயில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர், இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான விரைவு ரயிலை (வைகை) சுரேஷ் ஓட்டிச்சென்றார். அப்போது கொடைரோடு - அம்பாத்துரை இடையேநிலச்சரிவு ஏற்பட்டது. இதில்பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, சாதுர்யமாக செயல்பட்ட சுரேஷ், பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வீர தீர செயலுக்கான அண்ணா விருதுக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிந்துரை செய்தார். சென்னையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சுரேஷுக்குஅண்ணா விருதை முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x