Published : 25 Jan 2021 03:16 AM
Last Updated : 25 Jan 2021 03:16 AM
மதுரை நாராயணபுரம் ஆனந்த நகரைச் சேர்ந்தவர் அனீஷ் கபூர். இவரது மனைவி பாத்திமா பர்வீன்(24). இவர்களுக்கு 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் குளுமணாலிக்கு தேனிலவு சென்றனர்.
அப்போது பர்வீன் தனது 80 பவுன் நகை, சான்றிதழ்களை கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவரது மனைவியும், தனது வளர்ப்புத் தாயுமான ஜூவாரியா பானுவிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். வெளியூரில் இருந்து திரும்பிய பிறகு நகை, சான்றிதழ் களை ஜூவாரியாவிடம் திருப்பிக் கேட்டபோது, தர மறுத்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜூவாரியாபானு(45), உறவினர்கள் மொகைதீன் பாத்திமா(65), முகமது ஹசன்(40), நசிமா ரோஷி(32) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT