Published : 25 Jan 2021 03:16 AM
Last Updated : 25 Jan 2021 03:16 AM
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐஎன்டியுசி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐஎன்டியுசி கிருஷ்ணகிரி மாவட்ட 11-வது மாநாடு ஓசூரில் நடந்தது. மாநாட்டுக்கு ஐஎன்டியுசி தேசிய அமைப்பு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரமானந்த பிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் குப்புசாமி, துணைத்தலைவர் ஜி.முனிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஐஎன்டியுசி ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஓசூரில் தொழிலாளர்களின் வசதிக்காக வருங்கால வைப்பு நிதி கிளை அலுவலகம் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதில் மீண்டும் மாவட்ட தலைவராக கே.ஏ.மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக சோமசுந்தரம், துணை பொதுச்செயலாளராக சுந்தர்ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT