Published : 25 Jan 2021 03:16 AM
Last Updated : 25 Jan 2021 03:16 AM

தொடர் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறுவட்ட அளவில் கள ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து குறுவட்ட அளவில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் நேற்று முன்தினம் தெரிவித்தது: அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக விளை நிலங்களில் பயிரிடப்பட்டு, 33 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்த பயிர்கள் குறித்த விவரங்களை வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் மூலம் குறு வட்டார அளவில் கள ஆய்வு செய்து அதன் விவரங்களை உரிய படிவத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக குறு வட்டார அளவில் வட்டாட்சியர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த கணக்கெடுப்பு பணி அலுவலர்களால் வட்டார அளவில் சேகரிக்கப்பட்ட விவரங்களை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x