Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

வட மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும்

சென்னை

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு காலைநேரங்களில் பனிமூட்டம் நிலவவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த சில தினங்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.

23-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, கோவை விமான நிலையத்தில் 1 செமீ மழைபதிவாகியுள்ளது.

குளிரைப் பொறுத்தவரை கொடைக்கானல், உதகை ஆகிய இடங்களில் தலா 9 டிகிரி, வால்பாறையில் 11 டிகிரி, குன்னூரில் 14 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x