Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM
புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், லாலு பிரசாத்துக்கு நேற்று அதிகாலையில் மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன் பேரில், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, விமானம் மூலமாக லாலு பிரசாத் டெல்லி கொண்டு செல்லப்பட்டார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT