Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

10, 12 வகுப்புக்கான கற்றல் திறனறி தேர்வு நிறுத்திவைப்பு

சென்னை

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கரோனா விடுப்பு காலத்தில் மாணவர்கள் எவ்வளவு கற்றல் திறன் பெற்றுள்ளனர் என்பதைக் கண்டறிய ‘எமிஸ்’ தளம் வழியாக திறனறி தேர்வு நடத்த கல்வித் துறை திட்டமிட்டது.

இதையடுத்து பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக திறனறி தேர்வை ‘ஷிப்டு’ முறையில் நடத்தவும், அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு எந்தெந்த பாடப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆசிரியர்கள் திட்டமிட்டு செயல்படவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

அதன்படி மாணவர்களுக்கான திறனறி தேர்வு 22-ம் தேதி தொடங்கியது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல பள்ளிகளில் தேர்வைநடத்த முடியவில்லை. இதனால்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறுசரிசெய்யப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x