Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

புதிதாக 586 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 366, பெண்கள் 220 என மொத்தம் 586 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 153 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 34,171 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 673 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,984 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றுமுதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில்கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,309 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

3 ஆசிரியைகளுக்கு தொற்று

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் 3 ஆசிரியைகளுக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்ததில், 3 பேரும் நேரடிவகுப்புகளில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x