Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM
இளம் வாக்காளர்களைக் கவர நாம் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து கள வியூகங்களை அமைக்க வேண்டும் என்று விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ அறிவுறுத்தினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
இதில் மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசி யதாவது:
தேர்தல் விரைவில் வர உள்ளது. மேலூர், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் அதிகமான இளம் வாக்காளர்களை நாம் சேர்த்துள்ளோம். 200 வாக்காளர்களுக்கு 5 பேர் வீதம் பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் பிரச்சாரம் செய்ய வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களைக் கவர நாம் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து கள வியூகங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மேலூர் சட்டப் பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் அம்பலம், முத்துக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் நிலையூர் முரு கன், தக்கார் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT