Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

28 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் 28 வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்து ஆட்சியர் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பலர் ஓராண்டுக்கும் மேல் ஓரே பணியிடத்தில் இருந்தனர். இவர்களை பணியிடமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் முன்னிலையில் நடந்தது. இதில் 28 வட்டாட்சியர்களுக்கு இடமாறுதல் வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் ஆர்.திருமலை கள்ளிக்குடி வட்டாட்சியராகவும், மதுரை கலால் உதவி ஆணையர் அலுவலகக் கண்காணிப்பாளர் ஆர்.நவநீதகிருஷ்ணன் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், மேலூர் ஆர்டிஓ கே.அனீஷ்சத்தார் மதுரை தெற்கு வட்டாட்சியராகவும், மதுரை வடக்கு கூடுதல் கோட்ட கலால் அலுவலர் எம்.பி.முருகையன் ஆலய நிலப்பிரிவுக்கும், வரவேற்பு வட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராகிம் முத்திரைத்தாள் பிரிவுக்கும், நிலஎடுப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.வின்ஜேஷ்வரக்குமார் வடக்கு கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டார். மேலும் கே.சசிகலா, எஸ்.கருப்பையா, டி.வளர்மதி, வி.தமிழ்ச்செல்வி, பி.நாகரத்தினம், சோமசுந்தரசீனிவாசன் உட்பட 28 வட்டாட்சியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x