Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM
கிருஷ்ணகிரி: சந்தூர் கிராமத்தில் நடந்த விநாயகர் கோயில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் கிராமத்தில் பொங்கலை தொடர்ந்து விநாயகர் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் விநாயகர் கோயில் திருவிழா நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. முன்னதாக பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமியை வழிபட்டனர். அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் சந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT