Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

கனகமுட்லு கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி: கனகமுட்லு கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கனகமுட்லு கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இந்த விழாவினை யொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கிராம பெண்கள் மாவிளக்கு எடுத்து, மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கிராமத்தின் வீதிகளில் ஒன்று கூடி கோயில் வரை சென்றனர். அங்கு பொங்கலிட்டு, மாவிளக்கை வரிசையாக வைத்து, படையலிட்டனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமா னோர் கனகமுட்லு கிராமத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கிராம மக்கள் தங்கள் வீடுகளில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x