Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM
கரூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த சுமார் 30 பேர் நேற்று பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். இவர்களுடன் உணவுப்பொருட்களை ஏற்றிய மினி வேன் வந்துள்ளது. கரூர் மாவட்டம் காக்காவாடி அருகே வேனை நிறுத்தி பாத யாத்திரை குழுவினருக்கு கார்த்திகேயன்(28) என்பவர் பிஸ்கட் விநியோகம் செய்துள்ளார்.
அப்போது அவ்வழியாக ஒசூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற மினி கன்டெய்னர் லாரி, மினி வேன் மீது மோதியதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 2 பேர் கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT