Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

சிறப்பு மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னகோவிலான்குளம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி முகாமை தொடங்கிவைத்தார்.

முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிதாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சி, தொழுநோய், குடும்பநலம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். முகாமில், 486 பேருக்கு மருத்துவ சிகிச்சை, பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x