Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM
மண்டைக்காடு அருகே உள்ளபருத்திவிளையைச் சேர்ந்தவர் பினுமோன்(32). இவர்மண்டைக்காடு சந்திப்பு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளில் நின்றவாறு செல்போனில் பேசிக கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் பினுமோனை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் பினுமோன் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோஓட்டுநர் சுரேஷ், கோணங்காட்டைச் சேர்ந்த ராஜசேகர், பூலவிளையைச் சேர்ந்த நிஷாந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT