Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

ஆந்திராவில் மர்ம நோய் பரவல்22 பேர் பாதிப்பு

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோமாரெட்டி பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை திடீரென பொதுமக்கள் திடீர் திடீரென மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அவர்கள் ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 22 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் ஆதித்யநாத் தாஸ் நேரில் ஆய்வு நடத்திய பிறகு கூறுகையில், “நேற்று வரை மட்டுமே 13 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீர், கழிவு நீர்ப் பாதைகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x