Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM
குடியரசு தின நிகழ்ச்சியில் பொது மக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து, கபீர் புரஸ்கார் விருது, கோட்டை அமீர் விருது மற்றும் சிறந்த விவசாயிக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். இருப் பினும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கலை நிகழ்ச்சி கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடியரசு தின கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். சுதந் திரப் போராட்ட தியாகிகள், பொது மக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் ஏராளமானோர் பங் கேற்பார்கள். கரோனா பரவலால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுஉள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வயது மூப்பை கருத்தில் கொண்டு மாவட்டம்தோறும் அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் விழா வைக் காண நேரில் வருவதை தவிர்க்க வேண்டும். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று மாலை யில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஆளுநர் சார்பில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக இந்த நிகழ்ச்சி ரத்து செய் யப்படுவதாக ராஜ்பவன் ஏற் கெனவே தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT