Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM
பிஹாரைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது கடந்த சில மாதங்களாக அவதூறான கருத்துகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருவதாக காவல் துறைக்கு புகார் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறான, பொய்யான கருத்துகளைப் பரப்பினால் இணையதள குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஹார் அரசு நேற்று அறிவித்தது.
அதே நேரத்தில் விமர்சனம் ஆக்கப்பூர்வமானதாகவும், கண்ணியமான சொற்களைக் கொண்டும் நாகரிக வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண் டும் என்று அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது.
இணையதளங்களில் அவ தூறு கருத்துகளைப் பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாநில போலீஸ் டிஜிபி ஜிதேந்திர குமார் தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT