Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

பொறியியல் கல்லூரிகள் பிப்.18-ல் திறப்பு இல்லைஉயர்கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் பிப்.18-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று செய்தி சேனல்களில் தகவல் வெளியாகின.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின்வழிகாட்டு நெறிமுறைகளின்படி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதே வழிமுறைதான் பிப்.18-ம் தேதிக்கு பின்னரும் தொடரும். கல்லூரிகள் திறப்பதுகுறித்து உயர்கல்வித் துறையின் ஆலோசனையின்படி தமிழக அரசுதான் இறுதி முடிவு செய்யும். அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. எனவே, பிப்.18-ல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படமாட்டாது” என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x