Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM
நீட் ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக தேனி சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.
முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ரஷீத் கடந்த 7-ம் தேதி தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை பிப்.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையி்ல் ஜாமீன் கேட்டு ரஷீத் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது குறித்த விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில் சிபிசிஐடி தரப்பில் கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒரு ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வந்தால் இந்த வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜாமீன் மறுத்து நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT