Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

திருச்சியை சேர்ந்த நித்யா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி யில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை கட்டப்பட்டது, இதுவரை திறக்கப்படவில்லை

திருச்சியை சேர்ந்த நித்யா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி யில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை கட்டப்பட்டது, இதுவரை திறக்கப்படவில்லை. இந்த சந்தையை திறக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக வேளாண் துறை செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x