Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

கொடைக்கானல் மலைப்பகுதியில்பிப்.1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், உணவுப்பொருட்களைக் கையாளப் பயன்படுத்தப்படும் கையுறை, பாலித்தீன் பை, பரிசுப்பொருட்கள் சுற்றப் பயன்படும் காகிதம், லேமினேசன் செய்யப்பட்ட பேக்கரி அட்டைப்பெட்டிகள், ஐந்து லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களுக்குத் தடை விதிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் பிப்.1-ம் தேதி முதல் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரத் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டது.

பிப்.7- ம் தேதி முதல் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாபயணிகளைச் சோதனைச் சாவடியிலேயே கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. நகரில் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தப் பணியாளர்கள் நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஓரிரு நாட்களில் விரிவான அறிக்கை வழங்கப்பட உள்ளதாக சார் ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x