Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி தயாரிப்பு மும்முரம்

குடியரசு தின விழா நெருங்குவதை யொட்டி கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இதுகுறித்து கோவையில் தேசியக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, "கதர், மைக்ரோ, வெல்வெட் உள்ளிட்ட துணி வகைகளில், பல்வேறு அளவுகளில் தேசியக் கொடி தயாரித்து வருகிறோம். இவை குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வழக்கமாக குடியரசு தினத்துக்கு 3 மாதங்களுக்கு முன்னரே கொடி உற்பத்தி களை கட்டும். நடப்பாண்டு கரோனா ஊரடங்கால், எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பிருந்துதான் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் மும்முரமடைந்துள்ளன. நடப்பாண்டு கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்படாததால் எதிர்பார்த்த அளவுக்கு கல்வி நிறுவன ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அதேபோல, அரசு, தனியார் துறைகள் மற்றும் வெளி மாவட்டங்கள், கேரளா, புதுச்சேரி ஆர்டர்களும் குறைந்துவிட்டன. வழக்கமாக 1.50 லட்சத்துக்கும் அதிகமான கொடிகள் தயாரிக்கப்படும் சூழலில், தற்போது சுமார் 25 ஆயிரம் கொடிகளே தயாரிக்கப்பட்டுள்ளன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x