Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

அவதூறு புகார்: திமுக பிரமுகர் கைது

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகர மேற்கு காவல் நிலையத்தில் குமரன் நகரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் செல்வராஜ் ஒரு மனு அளித்தார். அதில், “கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். இதுபற்றி கேட்டதற்கு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு, நவநீதகிருஷ்ணன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x