Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதைஉறுதி செய்ய வலியுறுத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் தலைவர் எஸ்.காதர்பாட்சா நேற்று அளித்த மனுவில், "கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் மக்களின் தேவைக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெற, நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலமாக இரண்டு பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நிர்வாகங்களின் கவனக்குறைவால் இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் நீர் வீணாக செல்கிறது. வெளியேறிய நீர் மாசுபட்டு மீண்டும் அதே குழாய்க்குள் செல்கிறது. இதனால், அந்த நீரானது பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு தகுதியற்று போகிறது. இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகங்கள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x