Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 12 ஆண்டு சிறை

உதகை: உதகையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2016-ம் ஆண்டு உதகையில் மனநலம் பாதித்த சிறுமியை சிவப்பிரகாசம் என்ற இளைஞர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிவப்பிரகாசத்தை உதகை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம், பாலியல் துன்புறுத்தல் செய்த சிவப்பிரகாசத்துக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டடார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x