Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

திருத்தணி, மதுரவாயலில் நாளை நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருத்தணி, மதுரவாயல் தொகுதிகளில் திமுக சார்பில் நாளை (ஜன.23) நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் கடந்த டிச.23-ம் தேதி முதல் கிராமங்கள், வார்டுகளில் மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி (சேலம்), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடியநாயக்கனூர் (தேனி) மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்தக் கூட்டங்களில், `அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் நாளை (ஜன.23) காலை திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியிலும் மாலையில் மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியம், அடையாளம்பட்டு ஊராட்சியிலும் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மதுரவாயல், ஊரக தொழில் துறை அமைச்சர் ப.பெஞ்சமினின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x