Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
நாகர்கோவில்: தக்கலை அருகே மருந்துகோட்டையில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற காரை, போலீஸார் சோதனை செய்தனர். காருக்குள் ஓட்டுநர் இருக்கையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். தக்கலை ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் மடத்துவிளையைச் சேர்ந்த சுபாஷ்(34) என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT