Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
நாட்றாம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி(47), கணேஷ்(22). இருவரும் வெலக் கல்நத்தம் பகுதியில் தனியார் கட்டிட கட்டுமான பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து விழுந்ததில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். கணேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT