Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களை காண ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் சுற்றுலா

யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைக் காணும் வகையில் தமிழ

கத்தில் இருந்து சிறப்பு ரயில் சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அதன்படி, வரும் பிப்.18-ம்தேதி தமிழகத்தில் இருந்து புறப்பட்டு யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களை காண சிறப்பு ரயில்சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து, வரும் பிப்.18-ம் தேதி புறப்பட்டு கோவை போத்தனூர், ஈரோடு, சேலம், சென்னை பெரம்பூர் வழியாக மத்திய பிரதேசம் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சாஞ்சி ஸ்தூபி, கஜூராஹோ சிற்பங்கள் மற்றும்குவாலியரில் அழகான கோட்டைகள், ஜான்சியில் உள்ள ஜான்சிராணி லட்சுமி பாய் அரசாட்சி செய்தகோட்டை மற்றும் கோயில்கள் ஹலாலி அணை, போபாலில் பிம்பேட்கா குகை மற்றும் போஜ்பூர் சிவாலயம் ஆகியவற்றை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.10,200 கட்டணமாகும். உணவு, தங்குமிடம், ரயில், வாகன செலவு உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல்களுக்கு 90031 40680, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x