Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

பூடான், மாலத்தீவு உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கரோனா மருந்து அனுப்பும் பணி தொடக்கம்

புதுடெல்லி: ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்ஸின்’ ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த கரோனா தடுப்பு மருந்துகளை தங்களுக்கும் வழங்குமாறு பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சகங்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் கரோனா தடுப்பு மருந்துகளை கோரும் நாடுகளில் அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை தருவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய 6 நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. இவற்றில், பூடான், மாலத்தீவு நாடுகளே இந்த மருந்துகளை முதன்முதலில் பெறவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x