Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
நடிகை சித்ரா தற்கொலை குறித்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராகடந்த டிச.9 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர், ஹேம்நாத்தின் நண்பர் சையது ரோஹித் சார்பிலும் இடையீட்டு மனு்்க்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீதான விசாரணை நீதிபதி பி.பாரதிதாசன் முன்பாக நடந்தது. அப்போது நசரத்பேட்டை போலீஸ் தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எம்.பிரபாவதி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதேநேரம் இடையீட்டு மனுதாரராக ஹேம்நாத் நண்பரை அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்.2-க்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT