Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

தென் தமிழகம் டெல்டா பகுதியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. அதன் காரணமாக 21-ம் தேதி தென் தமிழகம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படக் கூடும். 20-ம்தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் உதகையில் 8 டிகிரி, கொடைக்கானலில் 9 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x