Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
ஈரோடு: 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 92 சதவீதம் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் முடிந்தவுடன், நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். இதர வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT