Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

பாலியல் கொடுமை வழக்கில் கைதானமூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கோவை: கோவை அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் கொடுமை செய்ததாக சில இளைஞர்கள் மீது 2018 டிசம்பரில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் துறையில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு 2019 ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கடந்த 5-ம் தேதி இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களின் நீதிமன்றக் காவல் நேற்று நிறைவடைந்ததையடுத்து, மூவரும் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, வரும் பிப்ரவரி 3-ம் தேதி வரை மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x